இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : இலங்கை குறித்து அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிப்படை தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை ஒடுக்காமல் இருப்பதை உறுதிபடுத்துமாறும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.