ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத்தொழிற்சாலையொன்றில் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்ட பகலுணவு ஒவ்வாமையால் 30 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் 13 பேர் பாதுக்க மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும், மதிய உணவில் இருந்த மீன் துண்டினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்