ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வா எம்.பி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டுவார் என குறிப்பிடுகின்றார்.
அதன்படி, அந்த செய்தியின் மூலம் தனது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்கிறார்.
இதேவேளை, ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனேகமாக இன்று பிற்பகல் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.