அனுமதியற்ற விறகுகளுடன் 6 சாரதிகள் கைது

-கிளிநொச்சி நிருபர்-

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் அனுமதியின்றி ஏற்றிச்செல்லப்பட்ட கொத்து விறகுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை 06 கனரக வாகனங்களில் வீர விறகு, பாலை, பூவரசு போன்ற கொத்து விறகுகள் அனுமதியின்றி ஏற்றி செல்லப்படுவதாக, கிளிநொச்சி மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஆணையிறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகள் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.