வாக்களிப்பு நிலையங்கள் தயார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், 13,759 வாக்குச் சாவடிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்