வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மழையுடனான காலநிலை நிலவும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
எனினும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் இன்று வியாழக்கிழமை மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
மேல், சபரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் மணிக்கு 20-30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்