போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – முல்லேரியா பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு – வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்