பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற  பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்