
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்தனகல்ல பிரதேச சபைக்குக் கதிரை சின்னத்தில் போட்டியிடும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்களால் தமது பெயர் மற்றும் படம் என்பன, பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டு அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக இருப்பதன் காரணமாக, அவற்றைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு அறிவிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.