தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

தும்மோதர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மாத்தறையிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த உயிரிழந்தவரின் வாகனத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் வீதியோரத்தில் குறித்த வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்க முற்பட்ட நிலையில் அதே திசையில் பயணித்த மற்றொரு வாகனம் அவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்