முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜூடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்டு உரையாடலின் போது குறித்த காணி ஆணைக் குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் கொடுத்த வழக்கிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜராகி இருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்