நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பான அறிவித்தல்

நாட்டில் தற்போது நிலவும் குளிரான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு,  தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையில் கடும் குளிரான காலநிலை காணப்படும்

சில சமயங்களில் மதியம் வரை குளிர் காலநிலை நீடிக்க சாத்தியமுண்டு

இந்தப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதே இதற்கு முக்கியக் காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இந்த நாட்களில் மாலை வேளையில் அவ்வப்போது பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.