கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல மழைக்காலங்கள் இருக்கலாம்.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளைஇ வடக்குஇ வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது காற்று வீசி வருகிறது. சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் 40-50 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மேற்கு திசையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழக பகுதிக்கு நகர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.