
வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வசந்த முதலிகே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதலிகே, இதற்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்தை பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.