டுவிட்டரில் இருந்து 200 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் திருட்டு

200 மில்லியனுக்கும் அதிகமான டுவிட்டர் சந்தாதாரர்களின் மின்னஞ்சல்கள் அல்லது மின்னணு முகவரிகள் டுவிட்டர் தரவுத்தளத்தில் இருந்து வெளி தரப்பினரால் அணுகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்களால் திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் வேறொரு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இது குறித்து டுவிட்டர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.