பாரம்பரிய விவசாய முறை உள்ளடங்கலான தைப்பொங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பாரம்பரிய விவசாய முறையினை கொண்டு விசேடமாக இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி   தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற குறித்த பொங்கல் விழாவில் பிரதேச செயலகத்தில் இருந்து மாட்டு வண்டி ஊடாக வயல் நிலப்பகுதியை நோக்கிச் சென்று பாரம்பரிய அறுவடை வைபவம் இதன் போது இடம் பெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பாரம்பரிய முறையிலான அறுவடை கலை கலாசார நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜையும் இடம் பெற்றது.

பூஜையினை சுவாமி மலை பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் மோகன சர்மா நடாத்தினர்.

குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.