மாநகர சபை வாகனம் விபத்து : மின்சார சபைக்கு பாரிய நஷ்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கண்டி பிரதான வீதி தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மின் அத்தியட்சகர் குமார சுவாமி தெரிவித்தார்.

திருகோணமலை மாநகர சபைக்கு சொந்தமான கெப் வாகனம் இன்று வியாழக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகன விபத்தினால் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபைக்கு பல லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மின் அத்தியட்சகர் குமாரசுவாமி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையிலிருந்து திருவண்ணாமலை மாநகர சபைக்கு வேகமாக சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் சாரதி மற்றும் கணக்காளர் காயம் அடைந்துள்ளனர்

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.