செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

 

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய .ளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் மேல் ஏறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் தேடியுள்ளார்.

சேற்றில் மாட்டிக்கொண்டமையால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் விவேகாநந்தன் வேணிலவன் (24 வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரது மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.