நண்பனுடன் மது அருந்திய மணமகன் : காதை கடித்த மணமகள்

நண்பனுடன் மது அருந்தியதால் மணமகனின் காதை மணமகள் கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கம்பளையில் உள்ள கலட்டா பிரதேசத்தில் தம்பதியொருவரின் வீட்டிற்கு   சென்ற போது மணமகன் தனது நண்பர் ஒருவருடன் மதுபானம் அருந்தியதற்காக மணமகனை தாக்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொறுமை இழந்த மணப்பெண்,   மணமகனின் காதில் ஒரு பகுதியை கடித்துள்ளார்.

அத்துடன், அவரது சகோதரியை தாக்கியதுடன், அவரது தந்தை மற்றும் தாயை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.மேலும் திருமண மோதிரத்தையும் மணமகன் மீது தூக்கி வீசினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் சிலரை மணமகளின் குடும்பத்தாரை அச்சுறுத்தி அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில் மணமகளின் குடும்பத்தினர் 119 என்ற பொலிஸ் இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மணமகனும், மணமகளும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மணமகள் கம்பளையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மணமகன் கலட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

தம்பதிகள் தேனிலவுக்கு வந்தபோது மணமகன் தனது நண்பருடன் பீர் குடித்து மகிழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவர், சுப நேரத்தை தவறவிட்டதால் தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரின் உறவினர்களுக்கு இடையில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க பொலிஸ் அவசர சேவை ஊடாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.