
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த செயல்
-யாழ் நிருபர்-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.
தற்பொழுது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமையிலால் எரிபொருளை சிக்கனப்படுத்தும்முகமாக தான் மிதிவண்டியில் பயணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களிலும் மோட்டார் வண்டிகளிலும் பயணம் செய்யும் நிலையில் செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.