இனந்தெரியாதோரால் வீடொன்றில் தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை இனம் தெரியாதவர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.