நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை

தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் பல காலப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.