வங்கிக்குள் நுழைந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

 

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் கணவரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வங்கிக்குள் நுழைந்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் கங்கோடாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹக்மன, புவக்கஸ்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.