இலங்கையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பரவும் தொழுநோய்

தொழுநோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை சான்றிதழ் பெற்றுள்ள போதிலும், கடந்த வருடம் நாட்டில் 1,325 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதில், 10 சதவீதம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்தும், 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.