கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2022 இல் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்

அங்கு போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பணம், எண்ணப்பட்டு, போராட்டக்காரர்களால் கோட்டை காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.