கல்வி சுற்றுலாக்கள் தொடர்பில் ஆராய ஆறு பேர் கொண்ட குழு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.