அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது.

கடந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர்.

கலாநிதி பிரதாப் ராமானுஜன், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷ் சமரரத்ன ஆகிய மூவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களின் நியமனத்திற்கு கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை நியமிக்கப்படாத நிலையில், இன்றைய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.