வர்த்தகர் மீது வாள்வெட்டு : பிண்ணனியில் வெளிநாட்டு பணம்

-யாழ் நிருபர்-

கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை செய்யப்பட்டது.

இதன்போது, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த குழுவினரை கைது செய்வதற்காக விசேட அணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.