989 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் நால்வர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 989 கிலோகிராம் கொண்ட காய்ந்த மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினர் நேற்று வயாழக்கிழமை மேற்கொண்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மோசடிகளுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்பரப்புகளின் ஊடுருவலைத் தடுக்க நாட்டின் கரையோரப் பகுதிகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, கடற்படையினர் டிங்கி படகு ஒன்றினை சோதனையின் போது, 14 சாக்குகளில் சுமார் 496.54 கிலோகிராம் உலர் மஞ்சள் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்ததுடன், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்ட 01 சாக்கு மூட்டையில் சுமார் 48.30 கிலோகிராம் உலர் மஞ்சளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடற்படையினர் நேற்று குருநகருக்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனை செய்தனர்.

சோதனையில் 445.800 கிலோ எடையுள்ள 12 சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட காய்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களையும், அதே நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 33 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காய்ந்த மஞ்சள் மற்றும் 02 டிங்கி படகுகளுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.