14 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோரின் சடலங்கள் மீட்பு
வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவரதும், இளைஞர் ஒருவரதும் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை – கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
14 வயது சிறுமியொருவரும், 20 வயது இளைஞரொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பில் இன்னும் உறுதியான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
எனினும், இவ்விருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும் குறித்த சிறுமி நன்னடத்தை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னரே அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.