துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பேலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்ட நபர்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேலியகொட – களுபாலமவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 33 வயதுடைய நபர் சில நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் சிகிசசை பலனின்றி உயிரிழந்துள்ளார்.