வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பால் நோயாளிகள் அவதி

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வைத்தியசாலைகளில் தமது நோய்க்கான சிகிச்சைகளை பெற வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.

மாதாந்த சிகிச்சை பெறுவோர்,  உடன் சிகிச்சை பெறுவோர் என பலரும் வைத்தியசாலைகளில் கூடி நின்றனர்.

பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர், இன்னும் சில வைத்திய சாலைகளில் நோயாளிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.

இவ்வாறு வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஸ்ட்ரைக் என்றால் எமது நோய்க்கு வைத்தியம் எவ்வாறு வைத்தியம் பார்ப்பது என்று நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.