மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு

வலிப்பு நோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஆஸ்துமா மற்றும் புற்றுநோயாளிகளுக்கான மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் அதுல அமரசேன தெரிவிக்கையில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, அசிஃபா வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.