PUCSL உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.