நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது

தற்போதைய பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 66இ000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

புத்தளத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பெரும் போக நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.