குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை-உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமாரிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவனொருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.

நேற்று பிற்பகல் குளவி கூட்டில் கழுகு ஒன்று இடையூறு செய்ததையடுத்து, குளவி கூடு கலைந்து, சிறுவன் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

உஹன, கொமாரிய பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.