பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை புகைப்படம் எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று திங்கட்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாராளுமன்றத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் குருந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.