கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.