யாழ்.மாதகல் – மாரீசன் கடலில் 150 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – மாரீசன் கடல் பகுதியில் 150 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.