யாழ்.மாநகர ஆணையாளர் மீது ஒழுக்காற்று விசாரணை

-யாழ் நிருபர்-

 

யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மீது மூவர் அடங்கிய குழு மூலம் விரைவில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ். நாவலர் மண்டபம் தொடர்பில் ஆணையாளருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தியமை மற்றும் பெண் உத்தியோத்தர் ஒருவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

விசாரணைகளில் நிர்வாக ஒழுக்க விதிகளை மீறியமை உறுதி செய்யப்பட்டால் இடமாற்றம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது