தாயை கொன்ற இராணுவ வீரரான மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

தாயை கொன்ற இராணுவ வீரரான மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

கெபித்திகொல்லேவ ஐத்திகேவெவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர், இராணுவ சிப்பாயான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஜூன் 5 ஆம் திகதியன்று, கழுத்து நெரிக்கப்பட்டு 50 வயதான குறித்த பெண் தனது வீட்டில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இராணுவ வீரரான மகனே தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றிவந்த, குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் குழுவொன்று கைது செய்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்