கச்சதீவு திருவிழா தொடர்பான ஆராய்வு கூட்டம்
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவஞானசுந்தரன் தலைமையில் மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள், உத்தேச செலவீனங்கள், பக்தர்களை அனுமதிக்கூடிய எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.