நீர்க்குழாய் ஒன்று வெடித்த போது வீதியால் சென்றவருக்க நேர்ந்த பரிதாபம்

மாவனல்லை – ஹெம்மாதகம வீதியில் வத்தேவ வரையில் புதிதாக போடப்பட்ட நீர் குழாய் வெடித்ததில் அவ்வழியாக பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை – துனுகம பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய ஒருவரே நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை நீர் வழங்கல் சபையுடன் இணைந்த நிறுவனமொன்று குறித்த குழாயின் அழுத்தத்தை பரிசோதிக்கும் நடவடிக்கையை அப்பகுதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

அப்போது, ​​குழாய் வெடித்து அவ்வழியாக சென்றவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.