ரயிலில் காய்கறிகள் பழங்களை கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் தயார் செய்யுமாறு பணிப்புரை

ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில், புகையிரத திணைக்களம் ஹாலிஎல, ஒஹியா, அம்பேவெல, பட்டிபொல மற்றும் நானுஓயா போன்ற புகையிரத நிலையங்களை மையமாகக் கொண்டு, பல சிறப்பு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி ஆய்வு ஓட்டத்தை நடத்தியது.

பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட 05 ரயில் பெட்டிகள் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் முறையை விரைவில் தயார் செய்யுமாறு பொறுப்பு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.