வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம்

கட்டண திருத்தத்தில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.