வெடிபொருட்களுடன் மீட்கப்பட்ட லொறி : கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க அனுமதி

பிங்கிரிய – விலத்தவ பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் 72 மணித்தியால விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட லொறியும் விசாரணைக்காக திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி இரவு பிங்கிரிய – விலத்தவ பிரதேசத்தில் வீதித் தடுப்பில் இருந்து வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்களும், 80 அடி நீளம் கொண்ட 21 சேவைக் கம்பிகளும்,  தலா 100 டெட்டனேட்டர்கள் பொருத்தப்பட்ட 09 பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்போது, மன்னாரை சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.