பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

பொதுநலவாய செயலகத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பெப்ரவரி 4-ம் திகதி 75-வது சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்பார் என்று பொதுநலவாய தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது 5 நாள் விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை மக்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.