டிக்டொக் செய்ய மறுத்த ஹோட்டல் பணியாளரை தாக்கிய பெண்

விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் அந்த விடுதியின் பணியாளரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணும் அவரது நண்பர்கள் குழுவும்  விடுதியில் தங்கியிருந்த நிலையில்,  டிக்டொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற விடுதி பணியாளரை அழைத்து நடனமாடச் சொல்லி கேட்டுள்ளார்,  ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண் பணியாளரை தாக்கியதோடு மற்றும் அவர் கையில் இருந்த பாத்திரத்தை அவர் முகத்தில் வீசியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்களால் இந்த தகராறு நீண்டு செல்லாமல் தீர்த்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.