எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம்

தனது நிறுவனத்தில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  அவர் விலை குறையும் என வெளியாகும் செய்திகளை கருத்திற் கொண்டு, விற்பனை முகவர்கள் கையிருப்புக்கான கொள்வனவை தாமதப்படுத்துவதால் சந்தையில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.