டெங்கு காய்ச்சலால் 5 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்தநாள் புதன்கிழமை அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.